என்னை திருமணம் செய்ததால் மகளை தந்தையே கொன்றார்: காதலன் புகார்

திருநெல்வேலி : மதுரையில் விஷ ஊசி போட்டு மகள் மாரிச்செல்வியை தந்தை ரங்கசாமி கொன்ற வழக்கில், ""என்னை திருமணம் செய்ததால் தான், மாரிச்செல்வி கொல்லப்பட்டார்,'' என காதலன் மோகன்ராஜா தெரிவித்துள்ளார்.

மதுரை எஸ்.எஸ்.காலனியை சேர்ந்தவர் ரங்கசாமி(47). பை பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்ஷாப் நடத்திவந்தார். இவரது மனைவி சுப்புலட்சுமி, மகள் மாரிச்செல்வி(18) பிளஸ் 2 முடித்து வீட்டில் இருந்தார். கடந்த 24ம் தேதி பிற்பகல்மாரிச்செல்வி விஷம் குடித்ததாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரித்தனர்.அதில் மாரிச்செல்வியை ரங்கசாமியும் அவர் ஏற்பாடு செய்த ஆட்களும் விஷ ஊசிபோட்டும் காதில் விஷம் ஊற்றியும் கொலை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரங்கசாமி கூறுகையில், ""என் மனைவி சுப்புலட்சுமியின் தம்பி மோகன்ராஜாவுடன் மாரிச்செல்வி பழகினார். பின் சென்னையில் தம்பி வீட்டிற்கு அனுப்பியிருந்த போது அங்கேயும் வேறு ஒரு நபருடன் பழகினார். குடும்ப மானம் கருதி கொலை செய்தேன்,'' என்று தெரிவித்தார். கொலை தொடர்பாக ரங்கசாமி, மற்றும் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். மாரிச்செல்வியை திருமணம் செய்த நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்த சுந்தரேசபுரத்தை சேர்ந்த மோகன்ராஜா கூறியதாவது: நான் மதுரையில் எனது அக்கா சுப்புலட்சுமியின் வீட்டில் தங்கியிருந்து ஒர்க்ஷாப்பில் வேலை பழகினேன். அப்போது எனக்கும் மாரிச்செல்விக்கும் காதல் ஏற்பட்டது. கடந்த மே 10ம் தேதி இருவரும் திருப்பூர் சென்று சிவன்கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டோம்.

இந்த விஷயம் வீட்டிற்கு தெரியவந்ததால் மாரிச்செல்விக்கு 18 வயது பூர்த்தியாகவில்லை எனக் கூறி, வரும் டிசம்பரில் முறைப்படி திருமணம் செய்துவைக்கிறோம் என பிரித்தனர். ரங்கசாமியின் அக்கா வேல்தாயின் மகனுக்கு மாரிசெல்வியை திருமணம் செய்துவைக்கவேண்டும் என்பதுதான் இதற்கு காரணம். இதற்காக மாரிச்செல்வியை சென்னையில் உள்ள வேல்தாயின் வீட்டில் தங்கவைத்தனர். மாரிச்செல்வி என்னை தவிர யாரையும் திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. இதற்கிடையே நான் வேலைக்காக சிங்கப்பூர் சென்றுவிட்டேன்.

எனவே மாரிச்செல்வியையும் என்னையும் கொலை செய்யும் நோக்கில் ஆகஸ்ட்டில் திருமணம் என பேசினர். நான் ஆகஸ்ட்டில் ஊருக்கு வந்தேன். தனது அக்கா மகனுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்ட ரங்கசாமி அதற்கு மாரிச்செல்வி சம்மதிக்காததால், அவரை கொலை செய்தார். ரங்கசாமி சொல்வது போல மாரிச்செல்விக்கு யாருடனும் எந்த பழக்கமும் கிடையாது. இந்த வழக்கை முறைப்படி விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Related Posts with Thumbnails
Share and Enjoy:
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • Blogplay
  • Add to favorites
  • Diggita
  • LinkedIn
  • MySpace
  • Technorati
  • Tumblr
  • Twitter

Leave a Reply

You must be logged in to post a comment.

We will keep You Updated...
Sign up to receive breaking news
as well as receive other site updates!
Featured Video
Sponsors
Hot Topics

விடைத்தாள் மாயமான மாணவர்களுக்கு மறுதேர்வு : தேர்வு கடினம் என 'புலம்பல்'

முசிறி: முசிறியில், 262 விடைத்தாள் காணாமல் போன மாணவர்களுக்கு, நேற்று ...

மனைவியை எரித்து கொன்ற கணவருக்கு ஆயுள்

பெரியகுளம் : வரதட்சணை கேட்டு மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்து ...

ஜெயில் கதவு திறந்தாச்சு ; காற்றாக வருகிறார் நித்தியானந்தர்; ரூ. 3 லட்சம் பணத்துடன் கைது

சிம்லா ; நடிகையுடன் உல்லாசமாக இருந்த நித்தியானந்தர் இமாச்சல பிரதேசத்தில் ...

ஏர்.ஆர்.ரகுமானுக்கு அமெரிக்க கிராமி விருதுகள் : இந்தியர்களையும் - இறைவனையும் நினைவுகூர்ந்தார்

லாஸ்ஏஞ்சல்ஸ்: உலக அளவில் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ...

ரஞ்சிதா விவகாரம்! கையை பிசையும் நடிகர் சங்கம்!!

நடிகை ரஞ்சிதா, பிரபல சாமியார் நித்தியானந்தாவுடன் உல்லாசமாக இருக்கும் ...
Mankatha Official Website
செய்திகளை தேடு
Custom Search
Cute Babies
தேதி வாரியாக
September 2010
M T W T F S S
« Aug   Oct »
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Ads
Endhiran
A2Z Indian Ads
Trailer
ISD Number Search
சுட சுட செய்திகள்
Categories
Recent Posts

வட இந்தியாவில் கடுமையான நிலநடுக்கம்

சிக்கிம்: சிக்கிமில் கடுமையான நிலநடுக்கம் ...

ஆண் பிள்ளைகளுக்கு ஆபத்து என தெருவில் விளக்கேற்றும் பெண்கள்

திருவள்ளூர்: எருமையின் மீது புத்தாண்டு ...

மாணவியை தாக்கிய பயிற்சி ஆசிரியை மீது போலீசில் புகார்

ஆத்தூர் : ஆத்தூரை அடுத்த நாவுக்குறிச்சியைச் ...

எட்டாம் வகுப்பு தேர்வெழுதிய 60 வயது "இளசு'

திருப்பூர் : தாராபுரத்தை சேர்ந்த 60 வயது ...
Recent Comments
Great One... Those who are not an Indian are requested not to answer it.Really bollywood songs are becoming rocking day by day but
Hello... My life,vist it http://sylviaj.webgarden.com/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://juhuacha.chefcuisto.com/2011/09/02/local-wedding-cakes/ ,Thanks....
Hello... My life,vist it http://xiangcai.blogfa.com/post-1.aspx ,Thanks....
Tag Cloud