சற்று முன்
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது
சென்னை: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி தொடங்கியது. சென்னை நுங்கப்பாக்கத்தில் உள்ள வீட்டின் அருகே போலீசார் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது. மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நடிகர்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.