Mar 22, 2023
உலகம்

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழப்பு

பெஷாவர்: பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் மசூதி வளாகத்தில் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலில் 17 பேர் உயிரிழந்தனர். மசூதியில் பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீஸ் குடியிருப்புகள் அதிகம் இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.